பொதுவாக அனைத்து வங்கிகளுக்கும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை, பண்டிகை தினங்கள் மற்றும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. இதில் பண்டிகை தின விடுமுறை மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். இந்நிலையில், வங்கிகளுக்கு இரண்டாவது சனிக்கிழமை மற்றும் நான்காவது சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்படுவதற்கு பதில் அனைத்து சனிக்கிழமையும் வங்கிகளுக்கு விடுமுறை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு நிதி அமைச்சகம் ஒப்புதல் வழங்கினால் நாடு முழுவதும் இந்த புதிய விடுமுறை அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.