அதிக வட்டி முதல் மறைமுக கட்டணங்கள் வரை பல விஷயங்களை டிஜிட்டல் கடன் செயலிகள் பயன்பாட்டில் கவனிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.

டிஜிட்டல் செயலிகள் மூலம் கடன் பெறுவது எளிதாக இருந்தாலும் அதனை பயன்படுத்துவோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். டிஜிட்டல் செயலிகள் மூலம் கடன் பெறுவதற்கு முன்பு முதலில் அந்த செயலி சட்ட பூர்வமானது தானா என்பதை உறுதி செய்ய வேண்டும். பொதுவாக வங்கி கடன் எளிதாக பெற முடியாதவர்கள் டிஜிட்டல் செயலியில் கடன் பெறுவதற்காக முயற்சி செய்கின்றனர். இதனை பயன்படுத்தி மோசடி செயல்கள் நடக்கின்றது.

அதிவேகமாக கடன் வழங்கப்படும் என்று கூறி அதன் பிறகு அதிக வட்டியை வசூலிக்கிறார்கள். இதானால் நீங்கள் மோசடியில் சிக்கி உங்கள் பணத்தை இழக்க நேரிடும். எனவே இந்த செயலியில் நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளை நன்றாக படித்து கடனை திரும்ப செலுத்தும் காலம் உள்ளிட்ட அம்சங்களை கவனிக்க வேண்டும் எனவும் முடிந்த அளவிற்கு இதுபோன்ற செயலிகளில் கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.