கர்நாடக மாநிலம் கோப்பில் மாவட்டம் அருகே லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களில் இரண்டு குழந்தையும் அடங்குவர். உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் சித்தராமையா உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். விபத்துக்குள்ளான லாரி தமிழ்நாட்டில் இருந்து குஜராத்திற்கு சென்றது தெரியவந்துள்ளது.