புலி, சிங்கம் போன்ற விலங்குகளை நேரில் கண்டால் நிச்சயம் நாம் அலறி தொடை நடுங்கி விடுவோம். ஆனால் மிருகக்காட்சி சாலைகளில் சிலர் விலங்குகளுடன் புகைப்படம் எடுக்கத் துணிவார்கள். ஆனால் இளைஞர் ஒருவர் இரண்டு சிங்கங்களுக்கு இடையில் பயமின்றி அமர்ந்திருந்து அவற்றை கட்டுப்படுத்துகிறார். தன்னைப் பார்த்து கர்ஜித்த சிங்கத்தை செருப்பால் அடித்து அவர் கட்டுப்படுத்தினார்.

இந்த வீடியோ @horrors என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் இந்த பதிவிடப்பட்டு வைரலாகி வருகிறது. அவருக்கு ஆனாலும் தைரியம் அதிகம்தான் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். விலங்குகளை துன்புறுத்தக்கூடாது எனவும் அறிவுரை வழங்குகின்றனர்.