திருவெற்றியூர் தனியார் பள்ளியின் 19-ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சியில் கூட்டுறவு துறையின் முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், நல்லி குப்புசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவு துறை அமைச்சர் கூறியதாவது, குருவை சாகுபடி சம்பா உள்ளிட்ட 11.23 லட்சம் மெட்ரிக் டன் பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில் 1 லட்சத்து 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்துள்ளனர். 4,800 ரேஷன் கடைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரிசி கடத்தல் கணிசமாக குறைந்த நிலையிலும் மேலும் கட்டுப்படுத்தப்பட்ட கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு  தலைமையில் தீவிர கண்காணிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது குறித்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 132 பேர் அரிசி கடத்தல் வழக்கில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் உள்ள ஒரு சில இடங்களில் கோதுமை தட்டுப்பாடு இருப்பது உண்மைதான். 10,000 மெட்ரிக் டன் கோதுமை கொள்முதல் செய்ய இந்திய உணவு கழகத்திடம் கோரிக்கை வைத்துள்ளோம். ஒதுக்கீடு செய்வதாக உறுதியளித்துள்ளனர் என அவர் கூறியுள்ளார்.