மானிய விலையில் உணவு தானியங்களை ஏழைகளுக்கு விநியோகம் செய்வதற்கு ரேஷன் கார்டுகளை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி இருந்தது. ரேஷன் அட்டையுடன் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடு ஏற்கனவே 2 முறை நீட்டிக்கப்பட்டு உள்ளது. முன்பாக கடைசி தேதி ஜூன் 30, 2023 ஆக இருந்தது.

இந்நிலையில் ரேஷன்-ஆதார் இணைப்புக்கான காலக்கெடு செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆகவே தவறாமல் ரேஷன் கார்டுடன், ஆதார் எண்ணை இணைத்து விட வேண்டும். ரேஷன் அட்டையை ஆதார் உடன் இணைப்பதன் வாயிலாக மோசடிகளை தடுப்பதோடு, பல்வேறு நன்மைகளை பெறலாம். ஆன்லைன் மற்றும் ஆப்லைனிலும் ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க முடியும்.