ஆதார் என்பது தற்போது அனைத்து முக்கியமான பணிகளுக்கும் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. அந்தவகையில் ரேஷன் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் ரேஷன் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பதற்கான காலக்கெடு ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னர் இது மார்ச் 30ஆம் தேதி வரை மட்டுமே இருந்தது. இதனை https://www.tnpds.gov.in/ என்ற இணையதளம் மூலமாகவோ, அல்லது நேரடியாக ரேஷன் அலுவலகங்களுக்கு சென்றோ இணைக்கலாம். ரேஷன் அட்டைகள் டூப்ளிகேட் ஆகாமல் தடுப்பதற்காக இணைப்பு வலியுறுத்தப்படுகிறது.