தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் மக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாட பொங்கல் பரிசு தொகப்புடன் அரசு சார்பில் ரொக்கமும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எவ்வளவு ரொக்கம் வழங்கப்படும் என்று பொதுமக்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.

இன்னும் மூன்று வாரத்தில் பொங்கல் பண்டிகை வரும் நிலையில் அர செய்த தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடாமல் உள்ளது. அதுமட்டுமல்லாமல் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களிலும் சில தென் மாவட்டங்களிலும் பெய்த கனமழை காரணமாக மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கியுள்ளது. இதனால் பொங்கல் பரிசு வழங்கப்படுமா என்று மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. மத்திய அரசிடம் கேட்ட நிதியும் வராத நிலையில் தமிழக அரசு கடும் நிதி நெருக்கடி இருந்தாலும் பொங்கல் பரிசு கண்டிப்பாக வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்