தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தரமான பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என்று உணவு பாதுகாப்பு துறை அறிவுறுத்தியுள்ளது. ரேஷன் பொருட்களை கள்ளச் சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் நோக்கத்துடன் செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ரேஷன் பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கள் தொடர்பாக பொதுமக்கள் 1800 599 5950 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என அறிவித்துள்ளது.