ரேஷன் கடைகள் மூலமாக மலிவு விலையில் பருப்பு, சீனி, பாமாயில் மற்றும் இலவசமாக அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலமாக ஏழை எளிய மக்கள் பயனடைந்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழகத்தில் ரேஷன் திட்டத்தை மேலும் மேம்படுத்தும் விதமாக மாதம் தோறும் குறை தீர்ப்பு முகாம்கள் அந்த பகுதிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் மூலமாக தங்களுடைய குறைகளை புகாராக கொடுத்துஅதற்காக தீர்வு பெறப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் ஜூலை 8-ம் தேதி காலை 10 மணி முதல் ஒரு மணி வரை குறைதீர்ப்பு முகாம் ஆனது நடைபெற உள்ளது. இதில் ரேஷன் அட்டைதாரர்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.  குடும்ப அட்டையில் பெயர், முகவரி, செல்போன் எண் ஆகியவற்றையும் மாற்றக் கோரியும் மனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.