இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பேர்லுஸ்கெனி ஆவார். இவர் கடந்த மாதம் காலமானார். இந்நிலையில் இவர் எழுதி வைத்துள்ள உயிலில் அவரது சொத்தில் ரூ.900 கோடியை காதலி மர்டா பாசினாவுக்கு (வயது 33) பெயரில் எழுதி வைத்துள்ளாராம். சில்வியோவின் மொத்த சொத்து மதிப்பு இந்திய மதிப்பில் ரூ.54 ஆயிரம் கோடி ஆகும்.

இவர் தனது Forza Italia கட்சியின் துணைத்தலைவர் பொறுப்பில் இருந்த பார்சினாவுடன் 2020 முதல் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து தனது மரணப்படுக்கையில் பார்சினாவை மனைவி என குறிப்பிட்ட அவர், ரூ.900 கோடி மதிப்பிலான சொத்துகளை அவரின் பெயரில் எழுதி வைத்துள்ளார்.