இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அரசு இது தொடர்பாக எச்சரிக்கை விடுத்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

வங்கி வாடிக்கையாளர்களுக்கு உதவுவது போல சில மோசடியாளர்கள் மெசேஜ் மூலம் பயனர்கள் பணத்தை மோசடி செய்து வருகிறார்கள். சமீபத்தில் பல எஸ்பிஐ பயனர்கள் இணைப்பை கிளிக் செய்து வெகுமதியை பெறுமாறு செய்திகளை பெற்றுள்ளனர். ஆனால் அது பொய்யான செய்தி என்று தெரியவந்துள்ளது. எனவே இது போன்று வரும் லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.