தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் இடையில் நேற்று போக்குவரத்து துறை மற்றும் இயக்கூர்திகள் சட்டங்கள் -நிர்வாக துறை தொடர்பான மானிய கோரிக்கை மீது விவாதம் நடந்தது. அதில் பேசிய அமைச்சர் சிவசங்கர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

இந்நிலையில் சாலை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவுபவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஏற்கனவே மத்திய அரசால் ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இது பற்றி சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் சிவசங்கர், சாலை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவும் நற்கருணை வீரர்களுக்கு மாநில அரசின் பங்களிப்பாக சாலை பாதுகாப்பு நிதியிலிருந்து கூடுதலாக ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்