பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் என்பது அஞ்சல் அலுவலக முதலீட்டு திட்டங்களில் மிக முக்கியமான சேமிப்பு திட்டமாக கருதப்படுகிறது. இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும். அதன் பிறகு மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படலாம்.

இந்த திட்டத்தின் கீழ் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து வந்தால் 15 ஆண்டுகளில் 3.18 லட்சமும், 20 ஆண்டுகளில் 5.24 லட்சமும், 25 ஆண்டுகளில் 81.7 லட்சமும் கிடைக்கும். மாதம் 5 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் 15 ஆண்டுகளில் 15.92 லட்சமும், 20 ஆண்டுகளில் 26.23 லட்சமும் பெறலாம். இந்த திட்டத்தில் இணைய விரும்பினால் வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களை அணுகவும்.