நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வாய்மேட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுவதற்காக ரூ.42 லட்சம் செலவில்  பூமி பூஜை நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் மலர் மீனாட்சிசுந்தரம் தலைமை தாங்கியுள்ளார். ஒன்றிய குழு உறுப்பினர் வேதரத்தினம் வரவேற்றுள்ளார்.

அதேபோல் கூட்டுறவு சங்க இயக்குனர் உதயம் முருகையன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பழனியப்பன் போன்றோர்  முன்னிலை வகித்தனர். மேலும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கரன், ராஜு, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மகாலிங்கம், ஒப்பந்தக்காரர்கள் அமுதன், பசுபதி, பாலமுருகன், பாலாஜி, சிவகார்த்திகேயன், இன்ஜினியர் அருள்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் அறிவழகன் நன்றி தெரிவித்துள்ளார்.