மேற்குவங்க தலைநகரான கொல்கத்தாவை சேர்ந்த இரண்டு தொழிலதிபர்கள் இருவர் மோமோஸ் விற்று 2100 கோடிக்கு மேல் சொத்து சேர்த்துள்ளார்கள். இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் பிடித்த உணவாக மோமோஸ் இருக்கிறது. இதற்காக ஒரு தனி உணவு பிரியர்களை இருக்கிறார்கள். இப்படிப்பட்ட உணவு நிறுவனத்தை உருவாக்கியவர்கள் தான் கொல்கத்தாவை சேர்ந்த நண்பர்களான சாகர் தனின் மற்றும் பினோத்குமார். இவர்கள் இருவரும் வாவ் மோமோஸ் என்ற நிறுவனத்தை உருவாக்கினார்கள்.

இவர்களுடைய பெற்றோர் கல்லூரி படிப்பை முடித்ததும் மேற்படிப்பு படிக்க கட்டாயப்படுத்தி இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் மோமோஸ் குறித்து ஐடியா சொல்லவே அதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இருவரும் பெற்றோரை சமாளித்து கடந்த 2018 ஆம் வருடம் 30 ஆயிரம் முதலீட்டில் சிறிய வாவ் மோமோஸ் கடையை திறந்தார்கள்.

அப்போது இவர்களுடைய கடையில் இரண்டு பகுதி நேர சமையல் காரர்கள் மற்றும் வேலை செய்து வந்தார்கள். அதன்பிறகு பல முயற்சிகளை செய்து கொல்கத்தாவில் பல கடைகளை திறந்தார்கள். இவர்களுடைய முயற்சியால் தற்போது இந்தியா முழுவதும் 800 வாவ் மோமோஸ் கடைகள் உள்ளது. ரூபாய் 30,000 முதலீட்டில் தொடங்கப்பட்ட இந்த கடை தற்போது மொத்த சொத்து மதிப்பு 2100 கோடி. ஒரு நாளைக்கு 6 லட்சம் மோமோஸ் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.