கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் ஜெயஸ்ரீ தன்னுடைய பையில் இருந்தால் 2000 ரூபாயை காணவில்லை என்று கூறியுள்ளார். இதனால் எட்டாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவி மீது அவருக்கு சந்தேகம் வந்த நிலையில் அந்த மாணவி தான் எடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.

ஆனாலும் ஜெயஸ்ரீ சக மாணவிகளை வைத்து அந்த மாணவியின் ஆடைகளை களைந்து சோதித்து பார்த்துள்ளார். இதனைத் தொடர்ந்து வீட்டுக்கு சென்ற மாணவி மனவேதனையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.