வருகிற செப்டம்பர் 30ம் தேதிக்கு பின் ரூ.2,000 நோட்டு செல்லாது என்ற அதிரடி அறிவிப்பை பாரத ரிசர்வ் வங்கி வெளியிட்டது. அந்த வகையில் ரூ.2,000 நோட்டு புழக்கத்திலிருந்து திரும்பப் பெறப்படுவதாகவும் ரூ.2,000 நோட்டு வைத்திருப்போர் அதை இன்று 23ம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எவ்வித ஆவணங்களும் இன்றி ரூ.2000 நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என்று பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது. ஆதாரோ, ஆவணங்களோ தேவையில்லை. எந்த படிவமும் பூர்த்தி செய்ய வேண்டியதில்லை. மக்கள் ரூ.2000 நோட்டை எளிதாக மாற்ற நடவடிக்கை எடுக்க கிளை வங்கிகளுக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவுறுத்தி உள்ளது.