இந்திய நிறுவனங்கள் ஏற்றுமதி செய்யக்கூடிய இருமல் மருந்துகளின் தரமானது சா்வதேச அளவில் சா்ச்சையான சூழலில், பிற நாடுகளுக்கு மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படுவதற்கு முன் அரசு ஆய்வகங்களில் பரிசோதனைக்கு உட்படுத்துவது பற்றி மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக அதிகாரிகள் கூறினர்.

இந்நிலையில் இந்தியாவிலிருந்து இருமல் மருந்தை ஏற்றுமதி செய்ய இனி தரச்சான்று அவசியம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏற்றுமதி செய்யப்படும் இருமல் மருந்தின் மாதிரியே குறிப்பிட்ட ஆய்வகங்களுக்கு அனுப்பி பரிசோதனை செய்ய வேண்டும். ஆய்வகங்கள் தரத்தை உறுதிசெய்த பிறகே இருமல் மருந்து ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.