பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா என்பது பொதுமக்களுக்காக மத்திய அரசு கொண்டுவந்த காப்பீடு திட்டங்களில் ஒன்று. இந்தத் திட்டத்தில் வெறும் 20 ரூபாய் செலுத்தினால் ஓராண்டுக்கு இரண்டு லட்சம் ரூபாய் காப்பீடு பெற முடியும். விபத்தில் பாலிசிதாரர் உயிரிழந்தால் அல்லது ஊனம் அடைந்தால் குடும்ப உறுப்பினர்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய் காப்பீடு வழங்கப்படும்.

18 முதல் 70 வயது வரை உள்ளவர்கள் இந்த திட்டத்தில் இணைய தகுதியானவர்கள். ஒவ்வொரு வருடமும் வங்கி கணக்கில் இருந்து 20 ரூபாய் தானாக டெபிட் செய்யப்படும். இது பற்றிய கூடுதல் விவரங்கள் அறிய https://nationalinsurance.nic.co.in/en/about-us/pradhan-mantri-suraksha-bima-yojana என்ற இணையதள பக்கத்தை அணுகவும்