விளவங்கோடு இடைத்தேர்தல் செலவை முன்னாள் எம்எல்ஏ விஜயதாரணியிடம் வாங்குங்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் நேற்று பரப்புரை மேற்கொண்ட அவர், இடைத்தேர்தலுக்கு எவ்வளவு செலவாகுமோ அதை ராஜினாமா செய்தவரிடம் வசூலித்துவிடுங்கள். இடைத்தேர்தலுக்கு ரூ.20 கோடி செலவாகும் என்றால் அதை தேர்தல் ஆணையம் விஜயதாரணியிடம் வாங்க வேண்டும். மக்கள் பணத்தை விரயம் செய்யக்கூடாது என்றார்.

முன்னதாக சொந்த பதவி ஆசைக்காக கட்சி மாறிச் சென்றவருக்காக மக்கள் பணத்தை ஏன் தேர்தல் ஆணையம் செலவிட வேண்டும் என சீமான் கேள்வி எழுப்பி இருந்தார்.
காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த விஜயதாரணி சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடக்கிறது.