இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் தபால் நிலைய சேமிப்பு திட்டங்களில் அதிக அளவு முதலீடு செய்து வருகிறார்கள். அதனால் மக்களுக்காக அதிக வட்டி தபால் நிலையங்களில் முதலீடு திட்டங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தபால் அலுவலக RD திட்டம் பயனாளிகளுக்கு 6.5 சதவீதம் வட்டி விகிதத்தை வழங்குகின்றது. இந்த திட்டத்தில் நூறு ரூபாய் முதலீடு செய்து நீங்கள் சேமிக்க முடியும். அது மட்டுமல்லாமல் ஜாயிண்ட் அல்லது தனி கணக்கை திறக்கும் வசதியும் இதில் உள்ளது. இந்த திட்டத்தில் முதலீடு செய்த முதல் ஐந்து ஆண்டு காலத்திற்குப் பிறகு ஒரே நேரத்தில் உங்களின் பணம் திரும்பி வழங்கப்படும்.

நீங்கள் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் முதிர்வு நேரம் ஐந்து ஆண்டுகளில் 60 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்யப்படும். அதில் உங்களுக்கு 11 ஆயிரம் ரூபாய் வட்டி கிடைக்கும். மேலும் உதிர்வு காலத்தை 5 ஆண்டுகள் கூடுதலாக நீடித்தால் உங்களுக்கு வைப்புத் தொகை 1.2 லட்சம் ஆக இருக்கும். வட்டியாக 49 ஆயிரம் ரூபாய் வரும். மொத்தம் 1.69 லட்சம் வரை நீங்கள் பெற முடியும். இப்படி நீங்கள் முதலீடு செய்யும் தொகையின் அடிப்படையில் நீங்கள் வருமானம் பெறலாம்.