உத்திரபிரதேச மாநிலத்தில் தற்போது ஆதித்யநாத் தலைமையிலான பாஜக கட்சியில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் என பல்வேறு பிரிவுகளில் சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி தற்போது சாமானிய மக்களும் மிகவும் பிரம்மாண்டமாக திருமணங்களை நடத்த வேண்டும் என்பதற்காக கிராமங்கள் தோறும் திருமண மண்டபங்களை கட்டும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் திருமண மண்டபங்கள் கட்டும் பணி முழுமை அடைந்த பிறகு குறைவான செலவில் பிரம்மாண்டமாக திருமணம் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

மேலும் கிராமங்களில் உள்ள பொதுமக்கள் திறந்தவெளிகளில் மலம் கழிப்பதை தடுப்பதற்காகவும் அனைத்து வீடுகளிலும் கழிப்பறைகளை கட்டி தருவதற்காகவும் அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. கூடிய விரைவில் பொதுமக்களின் அனைத்து வீடுகளிலும் கழிப்பறை கட்டும் பணி தொடங்கப்படும் என அரசு அறிவித்துள்ள நிலையில் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.