பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால் மகளிர் உரிமைத் தொகை நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், மகளிர் உரிமைத் தொகை, 100 நாள் வேலை திட்டம் ஆகியவை பாஜகவுக்கு பிடிக்கவில்லை. மீண்டும் பாஜக வென்றால் அந்த திட்டங்கள் நிறுத்தப்பட வாய்ப்பு உள்ளது என்றார். மேலும், விழுப்புரம், சிதம்பரம் தொகுதிகளில் வென்று விசிக அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறும் எனவும் கூறினார்.