நாடு முழுவதும் உள்ள விளிம்பு நிலை மாணவர்களுக்கு 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை மத்திய அரசு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகின்றது. இதற்கு தகுதியான மாணவர்கள் NMMS தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 9ம் தேதி இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் வீதம் நான்கு ஆண்டுக்கு 48 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.. மாணவர்கள் விண்ணப்பிக்க https://scholarships.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.