இன்றைய காலகட்டத்தில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் வியக்க வைக்கும் வகையிலும் இருக்கும். குறிப்பாக செல்லப் பிராணிகள் மற்றும் விலங்குகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு இணையத்தில் பகிரப்படுவதால் இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. தினம்தோறும் இது போன்ற வீடியோக்கள் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது.

பொதுவாகவே விலங்குகள் சில தன்னை வளர்ப்பவர்கள் மீது அதிக அளவு பாசம் கொண்டவையாக இருக்கும். அதன்படி தற்போது வெளியாகி உள்ள ஒரு வீடியோவில் ஒரு கூண்டுக்குள் புலியின் உரிமையாளரை கதவில் அடைப்பது போல ஒருவர் செய்கிறார். அதனைப் பார்த்து பயந்து போன புலி உரிமையாளரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று துடிக்கிறது. ஒரு கட்டத்தில் கதவு திறக்கப்பட உரிமையாளர் வெளியே வந்ததும் புலி அவருடன் கட்டி புரண்டு பாசத்தை வெளிப்படுத்துகிறது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.