கர்நாடக மாநிலத்தில் கடந்த சில தினங்களாகவே  கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால், அம்மாநிலத்தில் இருக்கும் பல அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. அந்த வகையில், சிவமோகா பகுதியில் உள்ள அரிசினங்குடி அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துச் செல்கிறது.

இந்த இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவர் அருவி அருகில் பாறை மீது நின்றுகொண்டு தனது நண்பரை வீடியோ எடுத்துச் சொல்லி உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பாசி வழுக்கி இளைஞர் திடீரென அருவி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். இளைஞர் உயிரிழந்து விட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.