இந்தியா ரிஷிகளாலும், வேதங்களாலும் உருவாக்கப்பட்டது. எந்த ராஜாவாலும் உருவாக்கப்படவில்லை என்று தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி கூறியுள்ளார். ராஜபாளையத்தில் கல்லூரி விழாவில் ஆளுநர் ரவி கலந்துகொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது ரிஷிகளாலும் வேதங்களாலும் கிடைத்த அறிவு மொழிதான் மக்களை வழிநடத்துகிறது என்று அவர் தெரிவித்தார். இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக வந்த ஆளுநருக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கருப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.