ரிஷப ராசி அன்பர்களே….

இன்று செயல்களில்  நீங்கள் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். வெற்றி பெறுவதற்கான எளிய வழிமுறை கண்டிப்பாக பிறக்கும் .நண்பர்கள் தேவையான உதவிகளை மனமுவந்து வழங்குவார்கள் .தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும் .வெளியூர் பயணங்களை பயனறிந்து மேற்கொள்ள வேண்டும் . தொழில் வியாபாரம் தொடர்பாக கொஞ்சம் அலைய  வேண்டி இருக்கும்.

இன்று எதிர்பார்த்த நிதி வசதி கிடைத்தாலும், திட்டமிட்டதை விட கூடுதல் செலவு இருக்கும்.பணியாளர்களிடம் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. பெரியவர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். உடன் இருப்பவர்களிடம் எச்சரிக்கையுடன் பழகுங்கள். முக்கியமாக ரகசியங்களை பேணி பாதுகாக்க வேண்டும். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். கடன் பிரச்சனையை தீர்ப்பதற்கு காலையில் எழுந்ததும் கடன்கள் இன்று அடைபட வேண்டும்.

இல்லை யேல் கடன்கள் மொத்தமாக அடைபட வேண்டும் என்று எப்போதும் சொல்லிக் கொண்டே இருங்கள்.நினைத்துக் கொண்டே இருங்கள் கண்டிப்பாக கடன் அடைபடக்கூடும். இந்த நாளில் நீங்கள் கடன் அடைபடுவதற்கான நாளாகவும் பயன்படுத்திக் கொள்ள முடியும். இன்று பெண்களுக்கு சுகபோக வாழ்க்கை அமையும் .சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். பெண்கள் இன்று மகிழ்ச்சி வெள்ளத்தில் காணப்படுவீர்கள். சரியான பாதையை தீர்மானிப்பீர்கள்.

இன்று பெண்கள்  திட்டமிட்டதை விட வேகமாக முன்னேறி செல்ல முடியும். கணவரிடம் ஏற்பட்ட வாக்குவாதங்கள் சண்டை சச்சரவுகள் எல்லாம் சரியாகும்.நீண்ட நாட்களாக திருமணம் ஆகி குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நல்ல செய்திகள் கண்டிப்பாக வரக்கூடும். இன்று மாணவர்களுக்கு புரிதல் உணர்வு அதிகமாக இருக்கும் .புத்தி கூர்மை வெளிப்படும். கல்வி மீது அக்கறை ஏற்படும் .முடிந்த அளவு மாணவர்கள் கல்விக்காக நேரத்தை செலவிடுவது நல்லது. விளையாட்டுத் துறையிலும் கவனம் செலுத்தலாம் தவறு இல்லை.

இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணியுங்கள், வெள்ளை உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். இன்றைய தினம் நந்தீஸ்வரர் மற்றும் முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியிலும் ஈடுபடுங்கள். நல்ல முன்னேற்றம் ஏற்படக்கூடும்.

அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : இரண்டு மற்றும் ஆறு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்  : வெள்ளை மற்றும் நீல நிறம்