மேஷம் ராசி அன்பர்களே….

இன்று காலையில் நீங்கள் எழுந்ததும் கண்டிப்பாக இறைவழிபாட்டை மேற்கொள்வது நல்லது. சிலர் உங்களுக்கு தவறான ஆலோசனை கொடுப்பார்கள். அதை பெரிது படுத்த வேண்டாம். அவர்கள் சொல்கின்ற விஷயங்களை பொருட்படுத்த வேண்டாம். அவப்பெயர் வராமல் நீங்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். தேவையில்லாத இடங்களில் பேச வேண்டாம். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். வீண் ஆசைகள் மனதிற்குள் தோன்று கொண்டிருக்கும்.

இன்று பண வரவு கிடைப்பதில் தாமதம் ஏற்படும். தியானம் தெய்வ வழிபாடு நிம்மதியை கொடுக்கும். மன அமைதி பெறுவதற்கு நீங்கள் முயற்சிகளும் மேற்கொள்ள வேண்டும். தொழிலைப் பொறுத்தவரை பெரிய அளவில் பிரச்சனை இல்லை. தொழில் ஓரளவு நல்லபடியாக தான் செல்லும் .ஆனால் பயணங்களின் போது கவனமாகத்தான் இருக்க வேண்டும். வாகனங்களை இயக்கும் போது கவனமாக இருக்க வேண்டும்.

இன்று மனதிற்குள் ஆழ்ந்த சிந்தனை ஓடிக் கொண்டிருக்கும். தேவையில்லாத விஷயங்களில் கவனம் செலுத்தினால் மனம் கவலை அடையும். சரியான நேரத்தில் உறங்க முடியாத சூழல் இருக்கும் எதையோ நினைத்துக் கொண்டிருப்பீர்கள். மிகவும் வேண்டியவரை நீங்கள் பயணத்தின் காரணமாக பிரிய வேண்டி இருக்கும். மற்றவருக்கு வழியே சென்று உதவி செய்வதால் வீண் விரோதங்களும் ஏற்படும்.

இன்று  நீங்கள் செய்கின்ற உதவிகளை கூட சிலர் தவறாக கருதுவார்கள். அதனால் பார்த்து கவனமாக இருங்கள். முக்கியமாக அரசியல் துறையில் உள்ளவர்கள் பார்த்து பக்குவமாக இருக்க வேண்டும். பணத்தை பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும். சாதகமான பலன் கண்டிப்பாக இருக்கும் பயப்பட வேண்டாம். பயணங்கள் செல்ல போட்ட திட்டம் வெற்றி கொடுக்கும் .மனதிற்கு பிடிக்காதவர்களை சந்திக்கக்கூடிய சூழல் இருக்கும் எந்த செயலிலும் யோசிக்காமல் ஈடுபட வேண்டாம்.

இந்த இனிய நாளில் அற்புதமாக பயன்படுத்திக் கொள்வது உங்கள் கையில் தான் உள்ளது. நீங்கள் முடிந்தவரை சிந்தித்து செயலாற்றுங்கள் .பெண்கள் எதிலும் அவசரப்பட வேண்டாம். முயற்சியால் முன்னேறி செல்ல முடியும். ஆழ்ந்த நித்திரை இருக்கும் ஆனால்  பெண்கள் சில விஷயங்களை புரிந்து கொள்ள வேண்டும். தேவையில்லாத விஷயத்தில் நேரத்தை செலுத்தினால் மன வருத்தம் நேரிடும் .

இன்று மாணவர்கள் மிகவும் பெருந்தன்மையுடன் நடந்து கொள்வீர்கள். கல்வியில் சாதிக்க முடியும் .உயர்கல்வி வெற்றியை கொடுக்கும். மாணவர்களுக்கு புத்தி கூர்மை வெளிப்படக்கூடும். சுய கௌரவம் மேலோங்கும் .இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை  அணிய வேண்டும். மஞ்சள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்றைய தினம் நந்தீஸ்வர மற்றும் முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியிலும் ஈடுபடுங்கள். வெற்றி உங்கள் பக்கம் இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண் :  1, 6 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்   :சிவப்பு மற்றும் மஞ்சள்