ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அதிமுக உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக நபர் ஒருவர் வாக்கு சேகரிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. ஓ. பன்னீர் செல்வத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள பலாப்பழம் சின்னத்தை கையில் வைத்துக் கொண்டு அவர் வித்தியாசமான முறையில் வாக்கு சேகரிக்கிறார். மேலும், “ராம்நாடை வல்லரசு நாடாக மாற்ற மோடி அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்” எனவும் அவர் கோரிக்கை வைக்கிறார்.