தமிழகத்தில் முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்களின் பொதுமக்கள் அனைவரும் வெளியூர் செல்ல ஏதுவாக அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகின்றது. அதன்படி அக்டோபர் மாதம் 13ஆம் தேதி மகாலய அமாவாசை தினம் என்பதால் பெரும்பாலான மக்கள் ராமேஸ்வரத்திற்கு அதிக அளவில் செல்வார்கள்.

இதனால் பயணிகளின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலமாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று அக்டோபர் 13ஆம் தேதி சென்னை, சேலம், கோவை மற்றும் பெங்களூரில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.