ராமநாதபுரம் தொகுதியில் ஓபிஎஸ் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த நிலையில் அந்த தொகுதியை தேர்வு செய்தது குறித்து ஓபிஎஸ் விளக்கம் அளித்துள்ளார். அதாவது ராமநாதபுரம் தொகுதி சேதுபதி மன்னரின் ஆளுகைக்கு உட்பட்டது. அங்கு வாழும் மக்கள் நீதியின்படி தர்மத்தின் படி நீதி வழங்குவார்கள் என்பது கடந்த கால வரலாறு. எனவே நீதியை வழங்கும் மக்கள் வாழும் மண் ராமநாதபுரம் என்ற வகையில் அங்கு போட்டியிடுகிறேன். நீதிக்கு புறம்பாக செயல்படுபவர்களுக்கு எதிராக விஸ்வரூபம் எடுப்பேன் என்று தெரிவித்துள்ளார்.