சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் செலவின பார்வையாளர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் வருமானத்துறை அதிகாரிகள் உட்பட பல்வேறு அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பேசிய சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன், வங்கியில் பணம் பெரிய தொகையை எடுத்தாலோ டெபாசிட் செய்தாலோ உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

பண நடமாட்டத்தை வங்கி அதிகாரிகள் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். மருத்துவமனைக்கு கட்டணம் செலுத்த பணம் எடுத்துச் சென்றாலும் உரிய ஆவணம் உள்ளதா என சரி பார்த்து அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்