பிரபல தமிழ் ராப் பாடகர் தேவ் ஆனந்த், பெங்களூருவிலிருந்து சென்னைக்கு வீடு திரும்பியபோது கடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து அதிகாரிகள் தொடர் விசாரணையின் ஒரு பகுதியாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டனர். அவர் காணாமல் போனதாக குடும்பத்தினர் புகாரளித்தபோது இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

அதாவது, 10 பேர் கொண்ட குழுவால் அவர் கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. நிதி விவகாரம் குறித்து கடத்தல் நடைபெற்று இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.