விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் ராஜா ராணி சீரியல். இதன் இரண்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் கதாநாயகியாக ஆலியா மானசா சந்தியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த நிலையில் கர்ப்பமாக இருந்த காரணத்தால் இந்த சீரியலில் இருந்து அவர் விலகினார். அவருக்கு பதில் ரியா விஸ்வநாதன் புதிய சந்தியாவாக களம் இறங்கி பழைய சந்தியாவை மறந்து புதிய சந்தியாவை மக்கள் ஏற்றுக் கொண்டனர்.

இந்நிலையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக சீரியலில் இருந்து அவர் விலகிய நிலையில் சந்தியா கதாபாத்திரத்திற்கு கோகுலத்தில் சீதை என்ற சீரியலில் நடித்த ஆஷா கௌடா நடித்து வருகிறார். இந்நிலையில் நேர்காணலில் ராஜா ராணி சீரியலில் நடிக்க வருவதற்கு இதுதான் காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார். அதாவது ராஜா ராணி சீரியல் மக்கள் மத்தியில் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான சீரியல். அதே சமயம் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரமும் போல்டாக இருக்கிறது. எனக்கு ஒரு மாற்றம் வேண்டும் என்பதற்காகவே இந்த சீரியலில் நடிக்க வந்தேன் என்று ஆஷா தெரிவித்துள்ளார்.