ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று பிரசாரம் ஓய்ந்த நிலையில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. ஏற்கனவே சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் முடிவடைந்துள்ளது. மொத்தம் 200 இடங்கள் இருக்கும் நிலையில் அனைத்து தொகுதிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ள நிலையில் டிசம்பர் 3ஆம் தேதி 5 மாநில தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளன.