இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் மீண்டும் ஒரு முறை மைதானத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார வீசிய பந்தை ரிஷப் பண்ட் பறக்கவிட்ட விதம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
போட்டியின் முதல் நாளில் இதே ஷாட்டை விளையாட முயன்றபோது காயம் ஏற்பட்டு பாதியிலேயே வெளியேறிய ரிஷப் பண்ட், இரண்டாவது நாள் ஆட்டத்தில் மீண்டும் களமிறங்கி வழக்கம்போல் அதிரடி காட்டினார். லஹிரு குமார வீசிய ஷார்ட் பிட்ச் பந்தை லெக் சைட் திசையில் பாய்ந்து வந்து மிகப் பிரம்மாண்டமாகப் புல் ஷாட் செய்தார் பண்ட்.
மட்டையின் நடுவில் பலமாகப் பட்ட பந்து, 95 மீட்டர் தூரத்திற்குப் பறந்து மைதானத்தின் மேற்கூரையின் மீது போய் விழுந்தது. இந்த அசுரத்தனமான அடி மைதானத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.
He tried to play this short ball
and ended up getting injured.
Was in terrible pain
and had to retire hurt.Yet the very next morning,
he returned with a heavily taped hand
and smashed a six off the exact same ball.MADMAN @RishabhPant17 🙏 pic.twitter.com/Zfum9wcRGd
— RP17 Gang™ (@RP17Gang) August 24, 2026
பந்து மைதானத்தின் மேற்கூரையில் விழுந்ததோடு நில்லாமல், அங்கு பொருத்தப்பட்டிருந்த சோலார் பேனல் மீது மோதி அதை பலத்த சேதத்திற்குள்ளாக்கியது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரீப்ளே காட்சிகளில், சோலார் பேனலில் பெரிய அளவில் பள்ளம் விழுந்திருப்பது தெளிவாகத் தெரிந்தது.
இந்த எதிர்பாராத சம்பவத்தினால் ஆட்டத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. பந்து மேற்கூரை மீது ஏறிவிட்டதால், மாற்றுப் பந்துடன் மைதானத்திற்குள் விரைந்த நான்காவது நடுவர், ஆட்டம் தொடர வழிவகை செய்தார். பண்டின் இந்த பிரம்மாண்டமான சிக்சர் கிரிக்கெட் வட்டாரங்களில் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
