மேற்கு வங்காளத்தில் உள்ள ஹன்ஸ்காலி பகுதியை சேர்ந்த ஸ்வப்னாதிப் எனும் இளைஞர் கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். விடுதியில் தங்கி படித்து வந்த இவரை அதே விடுதியில் தங்கி இருந்த சீனியர் மாணவர்கள் ராகிங் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான ஸ்வப்னாதிப் கடந்த ஒன்பதாம் தேதி விடுதி மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலை செய்து கொண்ட அன்று காலையில் தனது தாயாரை தொலைபேசியில் அழைத்த ஸ்வப்னாதிப் “நீங்கள் சீக்கிரம் வாருங்கள் உங்களிடம் பேச நிறைய விஷயங்கள் உள்ளது” என்று கூறியுள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு மாணவர்களான தீப்சேகர் தத்தா, மனோதோஷ் கோஷ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.