டெல்லி தர்ப்பங்கா விரைவு ரயில் உத்தர பிரதேசம் சராய் போபட் ரயில் நிலையம் வழியாக சென்றபோது ரயில் பெட்டி ஒன்றில் புகை வருவதை பார்த்த அதிகாரிகள் ரயில் ஓட்டுனரிடம் தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு தீ விபத்து ஏற்பட்ட பெட்டிகளில் இருந்த பயணிகள் பாதுகாப்பாக இறக்கி விடப்பட்டனர்.

இதனால் உயிர் சேதம் ஏற்படாமல் தடுக்க முடிந்துள்ளது. தீயணைப்பு படையினரும் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பெட்டியில் தீ பிடித்தது எப்படி என ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.