இந்தியாவில் நீண்ட தூர பயணங்களுக்கு மக்கள் பலரும் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ஏனென்றால் மிக குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை விரும்புகின்றனர். நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்து நிறுவனமாகவும் இந்திய ரயில்வே திகழ்கிறது.

இந்த நிலையில் தற்போது உள்ள செயலிகளை தவிர்த்து விட்டு இந்திய ரயில்வே விரைவில் புதிய சூப்பர் செயலியை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இதற்காக சுமார் 90 கோடி செலவழிப்பதாக பிரபல ஆங்கில நாளிதழ் தெரிவித்துள்ளது. ரயில்வே தொடர்பான அனைத்து சேவைகளையும் ஒரே செயலியில் பயணிகள் பெறும் விதமாக இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.