மத்திய பிரதேஷ் மாநிலம் போபால் பகுதியை சேர்ந்தவர் சாரல் நிகம். பி டெக் முடித்த இவர் யுபிஎஸ்சி தேர்வுக்கு பயிற்சி எடுத்து வந்தார். இந்நிலையில் போபால் பகுதியில் உள்ள அணை ஒன்றில் சாரல் நிகம் தோழியின் நாய் விழுந்துள்ளது.

அதனைக் காப்பாற்றுவதற்காக சாரல் நிகமும் அணையில் குதித்துள்ளார். ஆனால் அவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை மீட்ட போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நிகம் காப்பாற்ற நினைத்த நாய் உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.