தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகின்றனர். மற்ற போக்குவரத்துகளுடன் ஒப்பிடும்போது குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். இதனால் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு அவ்வப்போது சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

அதன்படி தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் வரை செல்லும் சிறப்பு ரயிலும், நெல்லை மற்றும் மேட்டுப்பாளையம் சிறப்பு ரயிலும் மே மாதம் இறுதி வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இந்த ரயில்கள் சேவை ஜூன் 24ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தாம்பரத்தில் இருந்து காலை 8.05 மணிக்கு கிளம்பும் இந்த ரயில் நாகர்கோவிலை இரவு 8.55 மணிக்கு அடையும். நெல்லையிலிருந்து மாலை 4.35 மணிக்கு கிளம்பி மறுநாள் காலை 4.10 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.