இந்திய ரயில்வே மேலாண்மை சேவைக்கான காலி பணியிடங்களுக்கான ஆர்ச் சேர்ப்பு 2023 ஆம் ஆண்டு முதல் UPSC மூலம் நடத்தப்படும் தனித்துவ தேர்வான ஐஆர்எம்எஸ் தேர்வு மூலமாக நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் பட்ச தாக்கல் செய்யப்பட்ட நிலையில் UPSC , DoPT கலந்தாலோசித்து இந்திய ரயில்வே நிர்வாகப் பணியில் ஆட்களை தேர்வு செய்ய இனி IRMS தேர்வு நடத்தப்படாது எனவும் யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வை தகுதி தேர்வாக எடுத்துக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வானதே டிசம்பர் மாதம் நடைபெறும் எனவும் upsc சிவில் சர்வீஸ் பிரீலிங்ஸ் தேர்வு, IMRSE மெயின் தேர்வுக்கான தகுதி தேர்வாக செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கான பாடத்திட்டம், வயதுவரம்பு உள்ளிட்டவை யுபிஎஸ்சி தேர்வு போலவே இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. தற்போது அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 21ஆம் தேதி முடிவடையும் எனவும் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் யுபிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையத்தளமான upsc.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். யுபிஎஸ்சி முதல் நிலை தேர்வு வருகின்ற மே 28ஆம் தேதி நடத்தப்படும் எனவும் இந்த ஆண்டு 1105 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.