இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயிலில் பயணம் செய்வதால் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு இந்திய ரயில்வே புதிய வசதிகளை வழங்கி வருகிறது. பொதுவாக ரயிலில் பயணம் செய்யும்போது இறங்க வேண்டிய இடத்தை தவறவிடுவது வழக்கமான ஒன்றுதான். இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாக டெஸ்டினேஷன் அலர்ட் எனப்படும் ஒரு புதிய சேவையை இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. இந்த சேவை ரயில் பயணிகளுக்கு ஒரு அலாரம் போல செயல்படக்கூடியது.

அதாவது பயணிகள் இறங்கும் இடத்திற்கு 20 நிமிடங்கள் முன்பு இறங்க வேண்டிய ரயில் நிலையம் வரப்போகிறது என்பதை அறிவிக்கும் விதமாக அலாரம் ரயிலில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அலாரம் கேட்டவுடன் பயணிகள் தங்களுடைய உடமைகளை எடுத்துக் கொண்டு தயாராக இருக்கலாம். நாம் ரயிலில் ஏறும் முன்பே இந்த சேவையை ஆன் செய்ய வேண்டும். இந்த சேவையை பயன்படுத்தும் மெட்ரோ நகரங்களில் உள்ள மக்களுக்கு நிமிடத்திற்கு 1.20யும் மெட்ரோ அல்லாத நகரங்களில் மக்களுக்கு ஒரு நிமிடத்திற்கு இரண்டு ரூபாயும் கட்டணம் வசூல் செய்யப்படும். அதே சமயம் எஸ்எம்எஸ் மூலமாக இந்த சேவையை பெறுவதற்கு மூன்று ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.

இதற்கு 139 என்ற ரயில்வே வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு போன் செய்து உங்களது மொழியை தேர்வு செய்து ஸ்டார் என்ற பட்டனை அழுத்தி வாடிக்கையாளர் சேவை அதிகாரியுடன் தொடர்பு கொண்டு உங்களது பத்து இலக்க PNR நம்பரை என்டர் செய்ய வேண்டும். இறங்க வேண்டிய ரயில் நிலையத்தை குறிப்பிட்டால் நீங்கள் இறங்கும் இடம் வரும் முன்பு அலாரம் செட் செய்யப்பட்டு விடும்.

அடுத்ததாக எஸ்எம்எஸ் வழியாக இந்த சேவையைப் பெற ALERT என்று டைப் செய்து 139 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்ப வேண்டும். சில நிமிடங்களில் இந்த சேவை உங்களுக்கு ஆக்டிவ் ஆகிவிடும். அதன் பிறகு நீங்கள் இறங்க வேண்டிய இடம் வரும் முன்பு எந்த பதற்றமும் இல்லாமல் நீங்கள் ரயிலில் இருந்து இறங்கலாம்.