இந்தியாவில் மக்கள் பலரும் நெடுந்தூர பயணங்களுக்கு ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். இதில் மற்ற போக்குவரத்தை விட கட்டணமும் குறைவு என்பதாலும் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் மக்கள் இதனை விரும்புகிறார்கள். இந்த நிலையில் ரயில் வர மக்கள் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும் போது அவர்களுக்கு இப்படி ஒரு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது ரயிலுக்காக மணி கணக்கில் காத்திருக்கும் உங்களுக்கு ரூம் புக்கிங் செய்து கொள்ளும் வசதி உள்ளது.

அதுவும் மிகக் குறைந்த தொகையில் கிடைப்பதால் உங்களுடைய அறையை நீங்கள் முன் பதிவு செய்யலாம். IRCTC மூலமாக ஆன்லைனில் உங்களுடைய அறைகளை முன்பதிவு செய்யலாம். இதற்காக முக்கிய ரயில் நிலையங்களில் ஓய்வு அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த அறைகளை 24 மணி நேரம் முதல் 48 மணி நேரம் வரை மட்டுமே நீங்கள் முன்பதிவு செய்ய முடியும். 24 மணி நேரமும் தங்கும் படுக்கைக்கு பத்து ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்படும். 24 மணி நேரம் முதல் 48 மணி நேரம் வரை ஓய்வு எடுக்கும் வரை 40 ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது