பொதுவாக நாம் திருமணம், பிறந்தநாள் உள்ளிட்ட  நிகழ்வுகளுக்கு தான் போஸ்டர் அடிப்பதை பார்த்திருப்போம். ஆனால், இங்கே வினோதமான போஸ்டர் ஒட்டப்பட்ட சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஆம், செங்கல்பட்டு ஆத்தூரை சேர்ந்த மனோகரன், குடியை மறந்து ஓர் ஆண்டு நிறைவை கொண்டாடியுள்ளார்.

அதற்காக ஊர் முழுவதும் தன்னுடைய புகைப்படத்தோடு போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார். அதில், குடியால் கெட்டதடா குடும்பங்கள் பல!, அதை நீ மறந்தால் வாழ்ந்திடலாம் ஆண்டுகள் பல!, மதுவை நீ குடித்தால் மரணம் உன்னை அழைக்கும், அதை நீ மறந்தால் உன் வாழ்க்கை உயரும் என குறிப்பிட்டுள்ளார்.