சேலம் மாவட்டம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் யாசகம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். அவரப் பகுதியில் வீணாக தூக்கி வீசப்படும் அட்டை பெட்டிகளை சேகரித்து அதன் மூலம் வருவாய் ஈட்டி வாழ்ந்து வந்துள்ளார். தன்னுடைய செலவுகளுக்கு மட்டுமல்லாமல் அந்த வருவாயில் சிறுக சிறுக சேமிப்பும் செய்துள்ளார். தனியாக வீடு எதுவும் இவருக்கு இல்லாத நிலையில் சாலை ஓரத்தில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் திடீரென இவர் உடல்நல குறைவால் உயிரிழந்த நிலையில் அப்பகுதி மக்கள் போலீஸா இருக்கு தகவல் தெரிவிக்க பாட்டியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை பாட்டியின் உடைமைகளை சேகரித்த போலீசார் கலங்க வைக்கும் அதிர்ச்சியை கண்டுள்ளனர். அதாவது அந்த பாட்டி சுருக்குப்பை ஒன்றில் பணத்தை சேர்த்து வைத்துள்ளார். அந்த சுருக்கு பையில் மொத்தம் 27 ஆயிரத்து 200 ரூபாய் இருந்ததாகவும் அதனை அரசு கருவூலத்தில் போலீசார் ஒப்படைத்ததாகவும் தெரிவித்துள்ளனர். வயதான காலத்தில் யாசகம் செய்து வாழ்ந்து வந்த மூதாட்டி இவ்வளவு பணம் வைத்திருந்த விஷயம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.