டெல்லியில் 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கலிகாட் மந்திர், டெல்லி தலைமைச் செயலகம் பகுதிகளிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த முதலமைச்சர் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். மேலும் அரசு போர்க்கால அடிப்படையில் பணியாற்றி வருவதால் பொதுமக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கூறியுள்ளார்.