இயக்குனர், எழுத்தாளர் என்று பல திறமைகளை கொண்டவர் நெல்சன் திலீப்குமார். இவர் முதல் முதலாக கோலமாவு கோகிலா என்ற படத்தை இயக்கினார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது . அதன் பிறகு டாக்டர் படத்தை இயக்கினார் இந்த படமும் வெற்றி படமாகவே இருந்தது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து வந்த இவர் விஜயின் பீஸ்ட் படத்தை இயக்கிய கடந்த வருடம் வெளியிட்டார் .

ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை. தற்பொழுது ரஜினி நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ படம் ரூ.600 கோடிக்கு மேல் வசூலித்து மிகப்பெரிய வெற்றிப்படமாக உருமாறியுள்ளது. இப்படத்திற்கு நெல்சன் ரூ.22 கோடி சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் நெல்சனை வைத்து அடுத்த படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காக, நெல்சனுக்கு சம்பளமாக ரூ.55 கோடி கொடுக்கவும் அந்நிறுவனம் முன்வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.